STHOTHRA RATHNAM

Showing the single result

  • Sthothram

    STHOTHRA RATHNAM

    300.00

    ஸ்தோத்ர ரத்நம் யப்பதியான ஸர்வேச்ரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள். அந்த ஆசாரியர்கள் அருளிய ஸ்தோத்ரங்களுள் ரத்நமாக அமைந்திருப்பது ஆளவந்தார் அருளிய ஸ்தோத்ரரத்நம்.  நாதமுனிகளின் திருப்பேரனாரான யாமுநாசார்யர் ,எம்பெருமானாரை தர்சன ஸ்தாபகராக ஆக்குவதற்காக இந்த ஸ்தோத்ரரத்நம் அருளிச் செய்யப்பட்டது. திருமந்த்ர, த்வய, சரம ச்லோகங்களின் அக்ஷர எண்ணிக்கை 65. அந்த ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமே இந்த ஸ்தோத்ரரத்நம். ஆகையால் தான் இதுவும் 65 லோகங்களுடன் கூடியது. இதனை கற்பதனாலும் கேட்பதனாலும் எம்பெருமானார் திருவுள்ளத்திற்கு உகப்பு ஏற்படும். ப்ராப்யப்ராபகங்கள் பகவானுடைய திருவடிகளே என்றும் ஆசார்ய ஸம்பந்தம் இருந்தால் மட்டுமே பகவான் கார்யம் செய்வான் என்றும் அறுதியிட்டுக் காட்டிய ஆளவந்தார் அருளிச்செய்த இந்த ஸ்தோத்ரரத்நத்தை கேட்டு நாமும் பகவத்ராமாநுஜர் திருவுள்ளத்துக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துவோம் வாரீர்!